ஒடிஷாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்... 2 தமிழக வீரர்கள் உள்பட 4 பேர் பலி
ஒடிசா : ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உட்பட 4 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டம் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக கருதப்படுகிறது. இது ஒடிஷா-ஆந்திரா எல்லையில் உள்ளது.

ஜன்பாய் முகாமைச் சேர்ந்த 104-ஆவது படைப் பிரிவினர் வழக்கமான ரோந்துப் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். சித்ரகொண்டா அணைப் பகுதியை படகு மூலம் கடந்து சிந்தாம்டோலி பகுதிக்கு அவர்கள் வந்தனர்.
அப்போது அப்பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களை குறிவைத்து மண்ணில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை மாவோயிஸ்டுகள் வெடிக்கச் செய்தனர். அதைத் தொடர்ந்து காட்டுப் பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் ஏராளமானோர், பாதுகாப்புப் படை வீரர்களை சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இந்த மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் கன்னியாகுமரியைச் சேர்ந்த அபிலாஷ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய வீரர்கள் உடல் இன்று தமிழகம் கொண்டுவரப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications