டெல்லி சாலை விபத்தில் 3 தமிழர்கள் பலி.... சினிமா பார்த்துவிட்டு திரும்பிய போது சோகம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 தமிழர்கள் பலியாகினர். பலியான மூவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
மோடி பாக்கில் உள்ள ஜேஜே க்ளஸ்டரில் 3 பேரும் வசித்து வந்தனர். இந்த மூவரும் நேற்று இரவு சினிமாவுக்குச் சென்றுவிட்டு ஒரே பைக்கில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது தௌலா கான் மேம்பாலத்தின் அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்தில் பலியானவர்கள் சுரேஷ் (26), எம். செந்தில் (25), பி. சுவாமி (35) என்பது தெரிய வந்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த 3பேரும் குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வந்ததுள்ளனர்.












Click it and Unblock the Notifications