ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல் !
டெல்லி: ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சேர்ந்துள்ளதாக மத்திய உளவுத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.தீவிரவாத குழுக்கள் சிரியா, ஈராக் நாடுகளின் ஒரு பகுதியை ஒருங்கிணைத்து புதிய நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உலகிற்கு பெரும் அச்சுருத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதத்தை அளிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க, ரஷ்யா, நாடுகளின் கூட்டுப் படைகள் தீவிர சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.

இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களை பலப்படுத்தி கொள்வதற்காக மற்ற நாடுகளில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து தங்களது இயக்கத்தில் சேர்த்து வருகிறார்கள். இதற்காக ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையத்தளங்களில் தங்களை நல்லவர்கள் போல காட்டும் மத உணர்வைத் தூண்டும் காட்சிகளை வெளியிட்டும் வருகிறார்கள்.
அந்த இணையதள தகவல்களை நம்பி ஏமாந்து உணர்ச்சி வசப்படும் இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் போய் சேருகிறார்கள். அந்த வகையில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 23 பேர் அப்படி இணையத்தள தகவல்களை பார்த்து நம்பி ஏமாந்து போய் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த 23 பேர் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளாக மாறிய 23 இந்தியர்களில் 6 பேர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மற்ற 17 பேரும் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இவர்களில் முகம்மது தாயீப் ஷேக் (வேலூர்), அபுதாகீர் (கரூர்), சாகுல் அமீது (சென்னை) ஆகிய 3 பேருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆயுதப் பயிற்சி கொடுத்து அவர்களை "பலிகடா" ஆக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மேலும் பல தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றி சிரியாவுக்கு இழுக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் தீவிரமாக இணைய தளங்களில் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். அதோடு தற்கொலை படைக்கு ஆள்பிடிக்க ஏஜெண்டுகளையும் களத்தில் இறக்கியுள்ளனர்.
அத்தகைய ஏஜெண்டுகளிடம் ஏமாந்த இளைஞர்கள் பற்றிய தகவல்கள் மத்திய உளவு துறைக்கு தெரிய வந்தது. உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பலரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற இந்திய இளைஞர்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தப்பட்டன. அந்த வகையில் சமீபத்தில் சூடானில் தமிழக வாலிபர் ஒருவர் கைது செய்து திருப்பி அனுப்பப்பட்டார்.
ஏஜெண்டுகள் பயன்படுத்திய லேப்டாப் மூலம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் மீது அனுதாபிகளாக மாறிய சில இளைஞர்கள் பற்றி தெரியவந்துள்ளது. அவர்களை உளவுத்துறை ரகசியமாக கண்காணித்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications