ஒரு மணிநேரத்தில் நாட்டையே உலுக்கிய 4 நிகழ்வுகள்.. இந்திய நீதித்துறையில் என்ன நடக்கிறது?
1 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த 4 நிகழ்வுகள் இந்திய நீதித்துறையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் சேர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என்று யாருமே நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். முக்கியமாக அவர்கள் தலைமை நீதிபதி மீதே புகார் அளிப்பார்கள் என்றும் நினைத்து இருக்க மாட்டார்கள்.
அவர்களின் 5 நிமிட பேட்டிக்கு அடுத்து தொடர்ந்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வருகிறது. நீதித்துறையும், மத்திய அரசும் மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறது.
நீதித்துறை தொடங்கி டிவிட்டர் வரை மக்கள் இதை குறித்துதான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். டிவிட்டர் டிரெண்ட்டில் 10 நிமிடத்தில் இந்த விஷயம் முதல் இடம் பிடித்துள்ளது.

பேட்டி
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நான்கு பேர் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என்ற செய்தி வெளியே வந்தவுடன் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், செல்லமேஸ்வர், குரியன் ஜோசப் அளித்த பேட்டி புயலை கிளப்பியது. நீதித்துறை சரியாக இல்லை, ஜனநாயகம் மோசமாகிவிடும் என மறைமுகமாகவும் நேரடியாகவும் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதும் இவர்கள் குற்றச்சாட்டு வைத்தார்கள்.

பிரதமரும் அமைச்சரும்
இந்த சம்பவம் நடந்தவுடன் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை நடத்தினார். நீதித்துறையில் என்ன மாதிரியான பிரச்சனைகள் இருக்கிறது என்பது குறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி விவாதம் செய்தார். இந்த பிரச்சனையை எப்படி அணுகுவது, என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்றும் விவாதித்து இருக்கின்றனர்.

அட்டர்னி ஜெர்னல்
இந்த பேட்டி முடிந்த அடுத்த நிமிடமே மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவசர அழைப்பு விடுத்தார். தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபாலும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் இந்த பிரச்சனை குறித்து தீவிர விவாதம் நடத்தினார்கள். இதில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று பேசியுள்ளனர்.

புயல்
தற்போது இந்த நிகழ்வில் அடுத்த புயல் உருவாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தற்போது இந்த புகார்கள் குறித்து வெளிப்படையாக பேசவுள்ளார். இன்னும் சில நிமிடத்தில் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருக்கிறார். இவரின் பேட்டியை தொடர்ந்து இந்த விஷயத்தில் பெரிய தெளிவு பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications