ஒரு பக்கம் அபிநந்தன்.. மறுபக்கம் தீவிரவாதிகளை அனுப்பிய பாக்.! 4 சிஆர்பிஎப் வீரர்கள் பலி
ஸ்ரீநகர்: அபிநந்தனை வாகா எல்லையில் பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்த அதேநேரத்தில், ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 4 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 40 பேரை கொன்றனர்.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதையடுத்து தீவிரவாதிகளுக்கு ஆதவாக பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவிற்குள் தனது போர் விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்த முயன்றது.

ஆவேசம்
இதை தடுக்க முயன்றபோது, இந்திய விமானி, அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்திய ராணுவம் மேலும் ஆக்ரோஷமானது. சர்வதேச அளவிலும் பாகிஸ்தானை அனைத்து நாடுகளும் கைவிட்டன.

நல்ல பிள்ளை
இதையடுத்து நல்ல பிள்ளை போல, அபிநந்தனை உடனடியாக விடுதலை செய்ய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று மாலை 5.20 மணிக்கு, வாகா எல்லையில், இந்திய அதிகாரிகளிடம், அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

தீவிரவாதிகள்
ஆனால், அதேநேரம், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், இந்திய படைகள் மீது காஷ்மீரின் குப்வாரா மாவட்ட எல்லையில் தாக்குதல் நடத்தினர். இதில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

கடமை பாக்கி இருக்கிறது
அபிநந்தனை மீட்பதோடு இந்திய கடமை முடியவில்லை. எதற்காக தாக்குதலை இந்தியா ஆரம்பித்ததோ, அதற்கான தேவை இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. பாகிஸ்தானின் நாடகத்தை நம்பினால் இந்திய ராணுவத்தின் மீதான தாக்குதல் தொடரும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications