Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திராவில் மீண்டும் செம்மரக் கட்டைகள் கடத்தல் - தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பிடிபட்டன. இவற்றைக் கார்களில் கட‌த்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சித்தூர் மாவட்டம் கார்வேட் நகரில் அம்மாநில வனத்துறையினர் மற்றும் போலீசார் நடத்திய வாகன சோதனையில், 3 கார்களில் கடத்தி வரப்பட்ட 40 செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

5 people arrested in red sandal wood smuggling

மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர்.

இதேபோல் எஸ்.ஆர். புரம் கிராமம் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, காரில் கடத்தி வரப்பட்ட 16 செம்மரக் கட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+