16வது லோக்சபாவில் 58% பேர் புதிய எம்.பிக்கள்...
டெல்லி: புதிய லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள எம்.பிக்களில் 58 சதவீதம் பேர் புதியவர்கள். அதாவது இப்போது தான் அவர்கள் முதன் முறையாக நாடாளுமன்றத்திற்குள் அடி எடுத்து வைக்க இருக்கிறார்கள். இது கடந்த 30 ஆண்டுகளில் மிக அதிக பட்ச அளவாகும்.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்தது. கடந்த வெள்ளியன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. எனவே, மத்தியில் புதிய அரசை அமைக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
ஏற்கனவே, அறிவிக்கப் பட்டபடி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி வரும் 26ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார்.
இந்நிலையில், லோக்சபாவில் இம்முறை அதிக புதியவர்கள் இடம்பெற உள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்த பி.ஆர்.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது :-

முதல் முறையாக....
தேர்ந்தெடுக்கப்பட்ட543 எம்.பி.,க்களில் சுமார் 315 உறுப்பினர்கள் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர்.

முன் அனுபவம்...
இது மட்டுமல்லாமல் 226 உறுப்பினர்கள் அதாவது 42 சதவீதம் பேர் ஏற்கனவே லோக்சபாவில் முன் அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர்.

9வது முறை....
பீகாரிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ராம் விலாஸ் பஸ்வான், ம.பி,,யிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட கமல்நாத், மேகாலயாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட பி.ஏ.சங்மா ஆகியோர் ஒன்பதாவது முறையாக லோக்சபாவிற்கு செல்கின்றனர்.

பெண் உறுப்பினர்களில்...
16-வது லோக்சபாவை பொறுத்த வரையில் பெண் உறுப்பினரான சுமித்ரா மகாஜன் அதிக அனுபவங்களை பெற்றவராக திகழ்கிறார்.

8வதுமுறை...
கரிய முண்டா, மற்றும் சிபுசோரன், அர்ஜூ்ன் சரண் ஆகியோர் எட்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

பாஜக நிலவரம்....
மேலும் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.,உறுப்பினர்கள் 282 பேரில் 116 உறுப்பினர்கள் (41 சதவீதம்) ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர் மீதம் உள்ள 165 பேர்(59 சதவீதம் ) முதல் முறையாக அனுபவத்தை பெற உள்ளனர்.

மற்ற கட்சிகளின் விபரம்...
அதே போல் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றிபெற்ற 44 பேரில் 35 பேரும்,அ.தி.மு.க.,வில் 34 பேர்(90 சதவீதம்) திரிணமுல் காங்கிரஸ் 19 (56 சதவீதம்) பேர் , பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த 12 பேர் (60சதவீதம்) ஆகியோர் முதன் முறையாக பார்லிமென்டிற்கு நுழைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications