டெல்லி பள்ளியில் 7 வயது சிறுமியை நிர்வாணமாக்கி மாதக்கணக்கில் மானபங்கப்படுத்திய சீனியர் மாணவிகள்
டெல்லி: டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் 7 வயது சிறுமிக்கு இரண்டு சீனியர் மாணவிகள் மாதக் கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.
டெல்லி மோதி நகரில் உள்ள சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியில் படித்து வரும் 7 வயது மாணவி ஒருவர் தனது பெற்றோரிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
அவர் தனது பெற்றோரிடம் கூறியிருப்பதாவது,

என் பள்ளியில் படிக்கும் 2 சீனியர் மாணவிகள் மதிய உணவு இடைவேளையில் என்னை யாரும் இல்லாத அறைக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு வைத்து எனக்கு ஏதோ போதை வஸ்து கொடுத்து ஆடையை கழற்றி நிர்வாணமாக்குவார்கள்.
அவர்களும் தங்களின் ஆடையை அவிழ்த்துவிட்டு என்னை கண்ட இடத்தில் தொடுவார்கள். இதை யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என மிரட்டினார்கள். இது பல மாதங்களாக நடந்து வருகிறது என்றார்.
இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததுடன் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களில் ஒருவர் மேஜர், ஒருவர் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications