பலாத்காரம் செய்த 28 வயது உறவுக்காரர்.. ஐசியூவில் 8 மாத பச்சிளம் குழந்தை.. டெல்லியில் கொடுமை
டெல்லி: 8 மாத பச்சிளம் குழந்தையை பாலியல் வக்கிரத்திற்கு உள்ளாக்கியுள்ள 28 வயது உறவுக்கார காமுகன் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான கட்டத்திற்கு சென்ற குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதிகளுக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால் சக குடும்பத்தாரிடம் குழந்தையை விட்டுச் செல்வார்கள்.
சம்பவத்தன்றும் அதேபோல தனது அண்ணியிடம் 8 மாத குழந்தை உட்பட 2 பெண் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுள்ளார் அந்த பெண். மதிய வேளையில் அண்ணியின் 28 வயது மகன், சிறுமியை கொஞ்சுவதாக கூறி தூக்கிச் சென்றுள்ளான்.
இந்த நிலையில், மாலையில், பெண்மணி வேலையில் இருந்து திரும்பி குழந்தையை பார்த்தபோது, அதன் பிறப்புறுப்பில் இருந்து அதிகப்படியாக ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்கள் உதவியோடு குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கூட்டிச் சென்றார்.
மருத்துவர்கள் பரிசோத்துவிட்டு அதிகப்படியாக ரத்தம் வெளியேறியது மற்றும் வலியால் குழந்தை மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாக கூறி ஐசியூவில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் அந்த பச்சிளம் குழந்தைக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
இன்று மதியம் நிலவரப்படி, குழந்தை ஓரளவுக்கு தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் குழந்தைகள் நல ஆர்வலர்கள், மற்றும் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு விரைந்து, குழந்தைக்கு உரிய சிகிச்சையளிக்க தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
டெல்லியின் பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி வெளியிட்ட டிவிட்டில், தானும் மருத்துவமனைக்கு விரைவதாக குறிப்பிட்டிருந்தார்.
The worst has happened. An 8 month old baby has been brutally raped in the Capital and is battling for her life in a Hospital. Going to the hospital to meet her. Am totally numb. Terrified to face her! Please please pray for her.
— Swati Jai Hind (@SwatiJaiHind) January 29, 2018
இதனிடையே போலீஸ் அதிகாரிகள் அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, குடிபோதையில், குழந்தையை சிதைத்ததாக ஒப்புக்கொண்டான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்து பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த காமக் கொடூரனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.