இந்தியாவில் ராணுவ ஆட்சி தேவை.. பெரும்பான்மை மக்கள் கருத்து இதுதான்.. ஷாக்கிங் சர்வே!
டெல்லி: இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என அதில் பெரும்பான்மையோர் நினைப்பதாகவும் சர்வே ஒன்று தெரிவிக்கிறது.
"பியூ ரிசர்ச் அமைப்பு, நடத்திய சர்வேயில்தான் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2012ம் ஆண்டு முதல் 6.9 சதவீதத்திற்கும் குறையாமல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. 85 சதவீத மக்கள் மோடி அரசை முழுமையாக நம்புகிறார்கள்" என்று முத்தாய்ப்பு கொடுக்கிறது இந்த ஆய்வு.
பல்வேறு நாடுகளிலும் அந்த நாட்டு அரசுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தியுள்ளது பியூ அமைப்பு.

ராணுவ ஆட்சி
இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் நான்கில் ஒருவராவது, ஏறத்தாழ 27 சதவீதம் பேர், வலிமையான தலைவர்தான் நாட்டுக்கு தேவை என கூறியுள்ளனர். 55 சதவீதம் பேர் ராணுவ ஆட்சி தேவை என கூறியுள்ளனர். இவர்கள் கூறிய வார்த்தைகள் வெவ்வேறு வகையாக இருப்பினும், அவர்கள் கூற வந்த கருத்து, ராணுவ ஆட்சி என்பதுதான்.

ரஷ்ய நிலை
அதேநேரம், ரஷ்யாவில் 48 சதவீதம் பேர் வலிமையான தலைவர் வேண்டும் என்றும், அரசு மீது தங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளனர். அரசு மீது நம்பிக்கை கொண்டோர் ரஷ்யாவை காட்டிலும் இந்தியாவில் அதிகம்.

டெக்னிக்கல் நிபுணர்கள்
ஆசிய பசிபிக் நாடுகளில், அரசில் நல்ல டெக்னிக்கல் நிபுணர்கள் இருக்க வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்பும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

ஆஸ்திரேலிய நினைப்பு வேறு
வியட்னாமில் 67 சதவீதம், இந்தியாவில் 65 சதவீதம், பிலிப்பைன்சில் 62 சதவீதம் மக்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆட்சியில் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும் என்று நினைக்கிரார்கள். ஆனால் ஆஸ்திரேலிய மக்களின் எண்ணம் வேறு மாதிரி உள்ளது. 57 சதவீத ஆஸி. மக்கள், அது ஆட்சி நடத்தும் நடைமுறை இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

முதியவர்கள் ஆதரவு ஜனநாயகத்திற்கு
55 சதவீத இந்தியர்களும், 52 சதவீத தென் ஆப்பிரிக்கர்களும், தங்கள் நாட்டுக்கு ராணுவ ஆட்சிதான் சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளபோதிலும், அதில் 50 வயதுக்கு மேற்பட்டோர் ஜனநாயகமே சிறந்தது என்று பதில் அளித்துள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications