For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தானில் சிறுமியை பலாத்காரம் செய்து பைக்கால் நசுக்கிய கயவர்கள்.. முதுகெலும்பு உடைந்த சோகம்

ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர், சரமாரியாக தாக்கி அவர் மீது மோட்டார் சைக்கிளையும் ஏற்றியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுமி இடுப்புக்கு கீழ் செயலிழந்து வாதத்தில் முடங்கியுள்ளார்.

Google Oneindia Tamil News

சுரு: ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த சிறுமி தற்போது வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலை 3.30 மணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த ராக்கேஷ் மற்றும் நரேஷ் ஆகிய 2 பேர் அந்த சிறுமியை வீட்டில் இருந்து தூக்கிச் சென்றுள்ளனர். கிராமத்தில் இருந்து 2 தொலைவில் சிறுமியை அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

A girl gang raped, Paralysed in Rajastan

பின்னர் சிறுமியை சரமாரியாக தாக்கிய அவர்கள், அவர் மீது மோட்டார் சைக்கிளையும் ஏற்றியுள்ளனர். இதில் சிறுமியின் முதுகெலும்பு உடைந்தது.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமிக்கு இடுப்பின் கீழ் செயலிழந்து போனது தெரியவந்தது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்த ராக்கேஷ் மற்றும் நரேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக வோலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
A 15-year-old girl in Rajasthan was allegedly gang-raped and beaten-up by two men. Then they were drove their motorcycle over her. She survived, but only as a paraplegic .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X