ஆதார் தகவல்களை சூப்பர் கம்யூட்டரால் கூட திருட முடியாது : தலைமை அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் உறுதி
உலகின் எந்த ஒரு சூப்பர் கம்யூட்டராலும் ஆதார் தகவல்களைத் திருட முடியாது என்று தனித்துவ அடையாள ஆணைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
டெல்லி : உலகின் எந்த ஒரு சூப்பர் கம்யூட்டராலும் ஆதார் தகவல்களைத் திருட முடியாத அளவுக்கு அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தகவல்கள் பாதுகாக்கப்படுவதாக தனித்துவ அடையாள ஆணையத் தலைமை அதிகாரி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டைக்காக மக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் பாதுகாப்புத் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜராகிய ஆதார் தனித்துவ அடையாள ஆணையத் தலைமை அதிகாரி அஜய் பூஷண் பாண்டே 'பவர் பாயிண்ட் பிரசண்டேஷன்' உதவியுடன் ஆதார் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஆதார் அட்டைக்காகப் பெறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அதிநவீன என்கிரிப்ஷன் தொழில்நுட்பத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், அதனை உலகின் எந்த ஒரு சூப்பர் கம்யூட்டரும் ஊடுருவித் திருடமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல்கள் இணையதளத்துடன் இணைக்கப்படவில்லை என்றும், ஒரு யுகமே ஆனாலும் இந்தத் தகவல்கள் வெளியே கசிவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆதாரில் பெறப்பட்டுள்ள பயோ மெட்ரிக் அடையாளங்கள் சிலருக்கு காலப்போக்கில் மாறும் தன்மை உடையதால், அதனை கண்டுபிடிக்கவும் சில தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றும் அஜய் பூஷண் பாண்டே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications