ஆம் ஆத்மி கட்சி ஒரு நீர்குமிழி… முலாயம்சிங் யாதவ் கமெண்ட்

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளைப் பற்றி இதுநாள் வரை கருத்துக் கூறாமல் இருந்த முலாயஅ சிங் யாதவ் இப்போதுதான் முதன் முறையாக தனது கருத்தினைக் கூறியுள்ளார். ஆக்ராவில் நடைபெற்ற திருமணவிழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாஜக, காங்கிரஸ் கட்சியை விரும்பாத வாக்காளர்கள், மூன்றாவதாக ஆம்ஆத்மி கட்சியை தேர்தெடுந்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி என்பது வெடிக்கும் நீர்க்குமிழி போன்றது. விரைவில் அது காணாமல் போய்விடும் என்றார்.
ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வெற்றி பற்றி கருத்து கூற மறுத்துவிட்ட அகிலேஷ், லோக்சபா தேர்தலில் பொதுப் பிரச்சினைகளை முன்னிறுத்தி மக்கள் வாக்களிப்பார்கள் என்றார். நாங்கள் எங்களின் செயலை மக்களுக்காக சிறப்பாக செய்து வருகிறோம். மக்கள் அவர்களின் முடிவை லோக்சபா தேர்தலில் தெரிவிப்பார்கள் என்றார்.
டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தலில் மொத்தம் 70 தொகுதிகளில் 27 இடங்களில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறைந்தது 7 பேர் வெற்றி பெறுவார்கள் என்று அந்த கட்சி சார்பில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அனைவரும் தோல்வி அடைந்தனர். இதேபோல மத்தியபிரதேச மாநிலத்தில் 50 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டதில் யாரும் வெற்றி பெறவில்லை. இதனால் பெரிய ஏமாற்றம் அடைந்த கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், அந்த மாநில கட்சி கிளைகளை உடனடியாக கலைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications