டெங்குவைத் தொடர்ந்து அச்சுறுத்தும் “ஸ்வைன் ஃப்ளூ”- தொடரும் நோய்களின் பிடியில் டெல்லி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் டெங்குக் காய்ச்சலைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் பரவும் அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஏராளமானோர் இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி மக்களை மேலும் அச்சுறுத்தும் விதமாக அங்கு பன்றிக்காய்ச்சல் எனப்படும் ஸ்வைன் ப்ளூ பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பரவி வருகின்ற டெங்குக் காய்ச்சலுக்கு டெல்லியில் இதுவரை 21 பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹெச்1.என்1 வைரஸும் பரவும் என்ற நிபுணர்களின் தகவலால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications