பள்ளிகளுக்கு அருகே “ஜங்க்” உணவுகள் விற்க தடை... எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ கோரிக்கை
டெல்லி: நூடுல்ஸ், சிப்ஸ், குளிர்பானங்கள், பீட்சா, பர்கர் போன்ற உணவு வகைகளை பள்ளிகளுக்கு அருகில் விற்பதற்கு தடை விதிக்கும் திட்டத்தை இந்திய உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு ஆணையம் முன்வைத்துள்ளது.
நாடு முழுதும், பள்ளிகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் "ஜங்க்" உணவுகள் விற்பதை தடுக்கும் விதிமுறைகளை மூன்று மாத காலத்தில் வகுக்குமாறு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.

அதிக உப்பு, கொழுப்பு, சர்க்கரை கொண்ட உணவுகள் சிறுவர்களின் உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என்று அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
எனவே இது போன்ற உணவுகளை சிறுவர்கள் உண்ணாமல் தடுக்கும் வகையில் பள்ளிகளிலும் அவற்றின் அருகிலும் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்ற வரைவு விதியை உருவாக்கியுள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் இவ்விதிமுறைகளை உணவு ஆணையம் உருவாக்கியுள்ளது.
டெல்லி நீதிமன்ற உத்தரவுப்படி ஜங்க் உணவு வகைகள் பள்ளிகளில் விற்கப்படுவதை தடுக்கும் நெறிமுறைகளை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தயாரித்து விட்டதால் அடுத்த கட்டமாக இத்தடை விரைவில் நாடு முழுதும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications