ஏர் இந்தியா ஊழியரை செருப்பால் அடித்த எம்பி மீது வழக்கு.. ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்கவும் தடை
விமானத்தில் ஏர் இந்தியா ஊழியரை 25 முறை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: விமானத்தில் ஏர் இந்தியா ஊழியரை 25 முறை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்கவும் அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வார் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு எப்போது வேண்டுமானாலும் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளது. இவர் நேற்று காலை திடீரென புனேவில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால் அதில் எல்லாம எகானமி வகுப்பை சேர்ந்த இருக்கையாக இருந்தது. இருப்பினும் அதிலேயே கெய்க்வாட் பயணம் செய்தார். டெல்லி விமான நிலையம் வந்தப் பிறகும் கூட விமானத்தில் இருந்து இறங்காமல் அதிலேயே அமர்ந்திருந்தார்.

சட்டையை கிழித்த எம்பி
இதுகுறித்து விமான நிலைய ஊழியர் ஏர் இந்தியா மேலாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த 60 வயதான ஏர் இந்தியா மேலாளர் சிவகுமார் எம்பியை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது வெறிபிடித்தது போல் மேலாளரரை அடித்து சட்டையை கிழித்தார் கெய்க்வாட்.

25 முறை செருப்பால் அடித்தார்
அவரது மூக்கு கண்ணாடியையும் அவர் அடித்து நொறுக்கினார். உச்சகட்டமாக அவரது செருப்பால் மேலாளரின் கன்னத்தில் மாறி மாறி 25 முறை அடித்தார். ஊழியரை எம்பி செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சிகளும் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

அடித்தேன் என திமிராக கூறிய எம்பி
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு எம்பி கெய்க்வாட் ஆமாம், செருப்பால் அடித்தேன் என திமிராக கூறியுள்ளார். ஏர் இந்தியா ஊழியர்கள் தன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதால் அடித்ததாக அவர் விளக்கமும் அளித்துள்ளார்.

தடைவிதித்தது ஏர் இந்தியா
இந்த சம்பவத்தையடுத்து ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய அந்த எம்பிக்கு அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.மேலும் அவரது அதிகார அத்துமீறல் குறித்து சிவசேனா தலைவர் உத்தாவ் தாக்கரே விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

எம்பி மீது வழக்குப்பதிவு
சிவசேனா எம்பி மீது காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் மேலாளரை சிவசேனா எம்பி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications