ஏர் இந்தியா ஊழியரை செருப்பால் அடித்த எம்பி மீது வழக்கு.. ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்கவும் தடை
விமானத்தில் ஏர் இந்தியா ஊழியரை 25 முறை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: விமானத்தில் ஏர் இந்தியா ஊழியரை 25 முறை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்கவும் அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வார் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு எப்போது வேண்டுமானாலும் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளது. இவர் நேற்று காலை திடீரென புனேவில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால் அதில் எல்லாம எகானமி வகுப்பை சேர்ந்த இருக்கையாக இருந்தது. இருப்பினும் அதிலேயே கெய்க்வாட் பயணம் செய்தார். டெல்லி விமான நிலையம் வந்தப் பிறகும் கூட விமானத்தில் இருந்து இறங்காமல் அதிலேயே அமர்ந்திருந்தார்.

சட்டையை கிழித்த எம்பி
இதுகுறித்து விமான நிலைய ஊழியர் ஏர் இந்தியா மேலாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த 60 வயதான ஏர் இந்தியா மேலாளர் சிவகுமார் எம்பியை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது வெறிபிடித்தது போல் மேலாளரரை அடித்து சட்டையை கிழித்தார் கெய்க்வாட்.

25 முறை செருப்பால் அடித்தார்
அவரது மூக்கு கண்ணாடியையும் அவர் அடித்து நொறுக்கினார். உச்சகட்டமாக அவரது செருப்பால் மேலாளரின் கன்னத்தில் மாறி மாறி 25 முறை அடித்தார். ஊழியரை எம்பி செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சிகளும் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

அடித்தேன் என திமிராக கூறிய எம்பி
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு எம்பி கெய்க்வாட் ஆமாம், செருப்பால் அடித்தேன் என திமிராக கூறியுள்ளார். ஏர் இந்தியா ஊழியர்கள் தன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதால் அடித்ததாக அவர் விளக்கமும் அளித்துள்ளார்.

தடைவிதித்தது ஏர் இந்தியா
இந்த சம்பவத்தையடுத்து ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய அந்த எம்பிக்கு அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.மேலும் அவரது அதிகார அத்துமீறல் குறித்து சிவசேனா தலைவர் உத்தாவ் தாக்கரே விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

எம்பி மீது வழக்குப்பதிவு
சிவசேனா எம்பி மீது காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் மேலாளரை சிவசேனா எம்பி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications