ஆந்திராவில் அதிரடி.. ஜெகன் மோகன் அமைச்சரவை கூண்டுடோடு ராஜினாமா.. மொத்தமாக மாற்றும் முதல்வர்
ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்கின்றனர்.
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் முடிவு செய்துள்ளதால் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். புதிய அமைச்சரவை வரும் 11ஆம் தேதி பதவியேற்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் ஜெகமோகன் தலைமையில் 2019ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. 150 தொகுதிகளை கைப்பற்றியது அக்கட்சி.
ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா முக்கிய இலாக்காவை பெறுவார் என்றும், துணை முதலவராக நியமிக்கப்படுவார் என்றும் அப்போது பேச்சுகள் அடிப்பட்டன. ஆனால் ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் அமைச்சரவை இரண்டரை ஆண்டுகளில் மாற்றம் செய்யப்படும் என ஜெகன் மோகன் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை மாற்றம்
இந்நிலையில், 3 ஆண்டுகள் நெருங்குவதால், அமைச்சர்களை மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி முடிவெடுத்துள்ளார்.
இதற்கிடையில் டெல்லி சென்ற அவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா உட்பட பலரை சந்தித்து மாநில வளர்ச்சி பணிகள், நிதி பற்றாக்குறை போன்றவை குறித்து விவாதித்தார்.

ஆளுநருடன் ஜெகன்மோகன் ஆலோசனை
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஜெகன், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனை நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, வரும் 11ஆம் தேதி புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி ஜெகன் மோகன் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர்கள் ராஜினாமா
அமராவதியில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து அமைச்சர்களிடம் இருந்தும் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை புதிய அமைச்சரவை பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டு, அவர்களுக்கு வரும் 11ஆம் தேதி பதவி பிரமாணம் செய்யப்பட உள்ளது.

ரோஜாவுக்கு வாய்ப்பு
கடந்த 2019ஆண்டில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றபோதே இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டுமே அமைச்சர்கள் பதவியில் நீடிப்பார்கள் என ஜெகன் மோகன் அறிவித்திருந்தார் அதன்படி இன்றைய தினம் அமைச்சர்கள் ராஜினாமா செய்து செய்துள்ளனர். புதிய அமைச்சரவையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமைச்சர் கட்டாயமாக இடம் பெறுவார் என கூறப்படுகிறது. அதன்படி, சித்தூர் மாவட்டத்தில், நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications