ஸ்பெக்ட்ரம் குற்றவாளிகளுடன் சந்திப்பு- சிபிஐ இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றவாளிகளை சந்தித்தது தொடர்பாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்காவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா பலமுறை சந்தித்து பேசினார் என்பது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இம் மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா, பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டுக்கு ஒருவாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நேர்மையாக நடக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம். இந்த வழக்கு நடைபெற்று வரும் நேரத்தில் பிராசந்த் பூஷன் மற்றும் ஜெய்ஸ்வாலின் புகார்கள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது
அத்துடன் ரஞ்சித் சின்க யார் யாரை சந்தித்ர் என்ற வருகை பதிவேடும் உச்சநீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications