காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு: மூடப்பட்ட நெடுஞ்சாலை- அமர்நாத் யாத்திரை நிறுத்தம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால், 300 கிமீட்டர் நீளமுள்ள அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை நேற்றிரவு மூடப்பட்டது. இதனையடுத்து அமர்நாத் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் 200 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை மூடல்
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால், 300 கிமீட்டர் நீளமுள்ள அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை நேற்றிரவு மூடப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாயினர்.
நிலச்சரிவு
நிலச்சரிவால் சேதம் அடைந்துள்ள சாலைகளை சீர் செய்யும் பணிகளில் எல்லைப்புற சாலைகள் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதனால், இன்று மாலை மீண்டும் போக்குவரத்துக்காக சாலை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமர்நாத் யாத்திரை
கனமழை காரணமாக ஜம்மு முகாமில் அமர்நாத் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் யாத்ரீகர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலை திரும்பிய உடன் பக்தர்கள் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
200 ஆண்டுகால மழை
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மணிப்பூர் மாநிலமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு மிககடுமையான மழை வெள்ளத்தால் மணிப்பூர் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு பாதிப்பு
பல இடங்களில் வீடுகள் மழை நீரில் மிதக்கின்றன. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.பல இடங்களில் சாலைகள் தூண்டிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி
60 சதவீதம் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்திற்கு மத்திய அரசு முதல் கட்டமாக 8.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications