1 டன் மீன், 1000 கி காய்கறிகள், 200 கி இறால்.. நீளும் லிஸ்ட்.. ஆந்திராவில் மாமனாரின் ஆடி சீர்வரிசை!
அமராவதி: புதிதாக திருமணமான மகளுக்கு 1000 கிலோ மீன், 10 ஆடுகள், 50 கோழிகள், 1000 கிலோ காய்கறிகள், 250 கிலோ இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றை வண்டி வண்டியாக சீர்வரிசையாக கொடுத்த ஆந்திராவை சேர்ந்த நபர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
பொதுவாக புதுமணத் தம்பதிகளுக்கு தீபாவளி, பொங்கல், ஆடி மாதம் என சீர் கொடுப்பது பெண் வீட்டாரின் வழக்கம். அவரவர் வசதிக்கேற்ப இந்த சீர் வரிசை பொருட்களின் எண்ணிக்கை இருக்கும்.
ஆடி மாதத்தை தெலுங்கு பேசும் மக்கள் ஆஷாதா மாதம் என அழைக்கிறார்கள். இந்த தினத்தையொட்டி புதுமண தம்பதிக்கு பெண் வீட்டார் சீர் செய்யும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர எல்லையில்
இந்த விழா ஆந்திர எல்லையில் உள்ள ஏனாம் பகுதியிலும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. இந்த விழாவையொட்டி ஏனாமைச் சேர்ந்த பவண்குமார் என்பவருக்கு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியை சேர்ந்த பத்துலா பலராம கிருஷ்ணா சீர் செய்துள்ளார்.

மகள் பவண்குமார்
பத்துலாவின் மகள் பிரதியுஷாவை பவண்குமார் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் கடந்த மாதம் 21 ஆம் தேதி நிகழ்ந்தது. இதனால் மகளுக்காக பத்துலா வண்டி வண்டியாக சீர் அனுப்பியுள்ளார்.

1000 கிலோ காய்கறிகள்
அதில் 1000 கிலோ மீன், 1000 கிலோ காய்கறிகள், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கோழிகள், 250 கிலோ மளிகை பொருட்கள், 250 வகையான ஊறுகாய், 50 வகையான இனிப்பு பொருட்கள் என பலவிதமான பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று மருமகன் வீட்டில் கொடுத்துள்ளார்.

சம்பவம்
இந்த பொருட்களை பார்த்துவிட்டு தொழிலதிபரான மாப்பிள்ளை வீட்டாரே அசந்து விட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். கோடி கோடியாக வரதட்சணை கொடுத்தாலும் பெண்ணிடம் மேலும் மேலும் வரதட்சணை கேட்கும் சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன.

சீர்வரிசை
எனவே வரதட்சணை, சீர்வரிசை உள்ளிட்டவைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் இது போல் வண்டி வண்டியாக சீர் வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications