ஆந்திராவில் கொடூரம்.... 14 வயது சிறுமி 6 பேர் கும்பலால் பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 14 வயதான சிறுமி ஒருவரை 6 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டத்தின், பெடபடுமண்டல் பகுதியில் உள்ள காஜிகுடம் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி மே 20ம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் அப்பா மற்றும் அம்மா கூலி வேலை செய்வதற்காக வெளியில் சென்றிருந்தனர்.

Andhra Pradesh: 14 years old girl gangraped

இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்குள் ரவி (30) என்பவர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து நுழைந்துள்ளார். பின்னர் தனியாக இருந்த சிறுமியை 6 காமுகன்களும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தனது பெற்றோரிடம் கூற பயந்த சிறுமி இந்த சம்பவத்தை மறைத்து வந்துள்ளார். சிறுமி உடல் ரீதியாக அவதிப்பட்டு வந்ததையடுத்து, அவரது பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமியை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான 6 பேரையும் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+