"என்னுடைய வடகிழக்கு.. உங்களின் பாசிச கைகளை எடுங்க" அஸ்ஸாமில் தனி ஒருத்தியாக அதிரவைத்த சிறுமி
குவஹாத்தி: அஸ்ஸாமில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட குவஹாத்தில், சுற்றிலும் ராணுவத்தினருக்கு நடுவே குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக தனியொருவராக சிறுமி போராடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளது. இந்த மசோதா சட்டமாகியுள்ள நிலையில், அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் தங்கள் மண்ணில் தங்களுக்கு உள்ள உரிமை பறிபோய் விடும் என்று அச்சத்தில் அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநில மக்கள் உள்ளார்கள்.

பல்லாயிரம் மக்கள்
வங்க தேசத்தில் இருந்து அகதிகளாக வந்த பல்லாயிரம் பேர் வடகிழக்கு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைத்தால் வேலை வாய்ப்பு, உள்பட பல்வேறு உரிமைகள் பாதிக்கப்படும் என்பது வடகிழக்கு மாநில மக்களின் அச்சம்.

வீதிகளில் இறங்கினர்
இதனால் ஆரம்பம் முதலே வடகிழக்கு மாநில மக்கள் குடியுரிமை திருத்த மசோதாவை வலிமையாக எதிர்த்து வந்தனர். இப்போது சட்டம் நிறைவேற்றப்பட்டதால் கொதித்து எழுந்து வீதிகள் தோறும் போராட்டத்தில் மக்கள் குதித்துள்ளனர். இந்த போராட்டத்தை எந்த அமைப்பும் முன்னின்று நடத்துவதாக தெரியவில்லை.

போக்குவரத்து முடக்கம்
பல ஆயிரம் மக்கள் போராட்டத்தில் குதித்து இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரான குவஹாத்தியில் விமான சேவைகள், ரயில் சேவைகள், போக்குவரத்து என அனைத்தும் அடியோடு முடங்கி உள்ளது.

துப்பாக்கிச்சூடு
இதனால் ராணுவமே அங்கு களம் இறங்கி அணி வகுப்பு நடத்தி வருகிறது. இதுவரை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளார்கள். நிலைமை மோசம் அடைவதை தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

தனி ஒருத்தி
இந்நிலையில் குவஹாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் ராணுவத்தினர் சுற்றி உள்ள நிலையில், சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தனி ஒருவராக பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினார்.

சிறுமி ஆவேசம்
அந்த சிறுமி தனது கையில் வைத்திருந்த பதாகையில், அரசியல் அமைப்புச் சட்டம், தற்போது தேவைக்கு அதிகமானதாகிவிட்டது. என்னுடைய வடகிழக்கு மாநிலங்களிலிருநது உங்களின் பாசிச கைகளை எடுங்கள்" என்று எழுதியிருக்கிறார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications