ஹாய் விராத்.. கோஹ்லிக்குப் போனைப் போட்ட அனுஷ்கா!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரிந்து போய் விட்ட விராத் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் தங்களுக்கு இடையே நிலவிவந்த மன இறுக்கத்தை விலக்கிக் கொண்டது போலத் தெரிகிறது.

பாகிஸ்தானுடன் நடந்த ஆசியாக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு கோஹ்லிக்கு போன் போட்டுப் பேசியுள்ளார் அனுஷ்கா சர்மா. அப்போட்டியில் கோஹ்லி அபாரமாக ஆடி அரை சதம் போட்டார். அவரது அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றதோடு இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தாராம் அனுஷ்கா சர்மா. இருப்பினும் இருவரும் மீண்டும் தங்களது மனக் கசப்பைத் தூக்கிப் போட்டு விட்டு இணைய முடிவெடித்துள்ளனர். அதன் முதல் படிதான் இது என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் சந்தோஷமாக கூறுகிறார்கள்.

திருமணத்தால் கருத்து வேறுபாடு

திருமணத்தால் கருத்து வேறுபாடு

மிக மிக நெருக்கமாக பழகி வந்த அனுஷ்காவும், கோஹ்லியும் திருமணம் தொடர்பான பேச்சுவந்த போதுதான் சில கருத்து வேறுபாடுகளுக்குள் போய் விட்டனர்.

சல்மான் முக்கியம்

சல்மான் முக்கியம்

சல்மான் கானுடன் சுல்தான் படத்தில் நடிக்க விரும்பினார் கோஹ்லி. ஆனால் அதை கோஹ்லி விரும்பவில்லை. மாறாக, உடனடியாக திருமணம் செய்ய அவர் விரும்பினார்.

தலையிடக் கூடாது

தலையிடக் கூடாது

எனது வேலையில் தலையிட வேண்டாம் என்று அனுஷ்கா கூற, கோபமாகி விட்டார் கோஹ்லி. இதனால் பேசுவதை, பார்ப்பதை நிறுத்தினார். இப்படியாக இருவருக்குள்ளும் பிரிவு வந்து விட்டது.

மச்சான் மூலம் தூது

மச்சான் மூலம் தூது

முன்னதாக அனுஷ்காவுடன் சமரசமாகப் போக கோஹ்லியும் கூட விடாமல் முயன்று வந்தார். அனுஷ்காவின் சகோதரர் மூலமாகவும் முயற்சித்து வந்தார்.

மீண்டும் காதல்

மீண்டும் காதல்

இந்த நிலையில் அனுஷ்காவே போன் போட்டு கோஹ்லியுடன் பேசியுள்ளதால் இருவரும் மீண்டும் சேரும் முடிவுக்கு வந்திருக்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+