கொரோனாவால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குக்கு ரூ15,000 - ஆந்திரா முதல்வர் ஜெகன்
அமராவதி: கொரோனாவால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குக்கு ரூ15,000 நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் 8-வது இடத்தில் இருக்கிறது ஆந்திரா. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,019. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 408.

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியதாக இருந்து வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆந்திராவில் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தனிமைப்படுத்துல் முகாம்களில் சத்துள்ள உணவுகள் வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழப்போரின் இறுதி சடங்குகளின் செலவுகளுக்காக ரூ15,000 அரசு நிதி உதவி வழங்கவும் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications