உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுனர்களும் ஆர்.டி.ஐ கீழ் வர வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி!
அனைத்துத் துறைகளிலும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டுமெனில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுனர் உள்ளிட்டோரும் ஆர்டிஐயின் கீழ் வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம், ஆளுனர் அலுவலகம் உள்பட அனைத்துமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வர வேண்டும் என்று முதன்முறையான உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் அமர்வு, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் அனைத்து அமைப்புகளும் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டுமெனில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வர வேண்டும். அதிலும் குறிப்பாக ஆளுனர் அலுவலகம் மற்றும் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் உள்ளிட்டவையும் ஆர்டிஐயின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறினர்.

2007ம் ஆண்டு ஜூலை- ஆகஸ்ட் மாதத்தில் கோவா அரசியல் சூழலை அறிந்து கொள்ளும் வகையில் ஆளுனர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. அப்போது அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மனோகர் பாரிக்கர் இந்தத் தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.
இதற்கு ஆளுனர் மாளிகை மறுப்பு தெரிவித்ததையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆளுனர் அலுவலகம் பொதுமக்களுக்கான அதிகார மையம் என்று கூறி அந்த காலக்கட்டத்தில் ஆளுனர், குடியரசுத் தலைவர் இடையேயான அறிக்கை பரிமாற்றங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதே போன்று இந்திய தலைமை நீதிபதியையும் ஆர்டிஐயின் கீழ் கொண்டு வருவது தொடர்பான வழக்கிற்காக மத்திய அரசு வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜரானார். அப்போது சட்ட பரிபாலனங்களுக்கு உட்பட்ட தலைமை நீதிபதிகள் இறையாண்மையை பாதுகாப்பவர்கள் எனவே அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது. தலைமை நீதிபதிக்கும், நீதிபதி அலுவலகத்திற்கும் இடையே எந்த ஒளிவு மறைவும் இல்லை, அதனால் அவற்றை ஆர்டிஐக்குள் கொண்டு வருவதில் எந்தத் தடையும் இல்லை. ஆளுனர் மற்றும் இந்திய தலைமை நீதிபதியையும் ஏன் ஆர்டிஐயின் கீழ் கொண்டு வரக்கூடாது என்று நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் அரசுக்கு அரசியல் சாசன அமர்வுக்கும் இடையே மிகப்பெரும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் முதன்முறையாக நீதித்துறையையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் முதன்மை அமர்வு முதன்முறையாக கேட்டுள்ளது.
ஏற்கனவே சில உயர்நீதிமன்றங்கள் இந்திய தலைமை நீதிபதி ஆர்டிஐக்கு கீழ் வருவார் என்று கூறியுள்ளது. இதே போன்று கடந்த 2009ம் ஆண்ட டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதிகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்று உத்தரவிட்டதோடு நீதிபதிகள் தங்களது சொத்து விவரத்தை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர், இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இது வரை மிகப்பெரிய அதிகார மையங்களான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுனர் ஆகியோரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அரசியல் சாசனம் கூறும் நிலையில் முதன்முறையாக இவர்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்த அறிவுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications