அர்ணாப்புக்கு அடுத்து டைம்ஸ் நவ் எடிட்டர் யார் தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 'டைம்ஸ் நவ்' ஆங்கில செய்தி சேனலின் தலைமை எடிட்டராக பணியாற்றிய அர்ணாப் கோஸ்வாமி அப்பதவியை ராஜினாமா செய்த நிலையில், 'நியூஸ் எக்ஸ்' என்ற ஆங்கில செய்தி சேனலின் எடிட்டராக பணியாற்றிய ராகுல் சிவசங்கர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூஸ் எக்ஸ் சேனலின் எடிட்டராக உள்ள ராகுல் சிவசங்கர், அந்த சேனலில் தொகுப்பாளர் பணியையும் பார்த்து வருகிறார். இதற்கு முன்பு அவர் டைம்ஸ் நவ் சேனலில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராகும்.
சமீபத்தில் டைம்ஸ் நவ் எடிட்டர் பதவியிலிருந்து விலகினார் அர்ணாப் கோஸ்வாமி. ஆனால் அவர் அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications