வாக்குச்சாவடியில் வாக்காளருடன் இ.வி.எம். முன்பு ராகுலுக்கு என்ன வேலை?: கெஜ்ரிவால்
அமேதி: அமேதியில் வாக்குப்பதிவு நடந்தபோது அந்த தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வாக்காளர் ஒருவருடன் சேர்ந்து வாக்களிக்கும் இடத்தில் என்ன செய்தார் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுயில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இந்த தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி களத்தில் உள்ளார். இந்நிலையில் ராகுல் வாக்குச்சாவடி ஒன்றுக்குள் சென்று வாக்காளர் ஒருவருடன் சேர்ந்து வாக்குப்பதிவு எந்திரம் இருக்கும் பகுதியில் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,
இதுவே வேறு ஏதாவது வேட்பாளர் வாக்குச்சாவடிக்குள் சென்றிருந்தால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் என்ன செய்திருப்பார்கள் என்று நினைத்து வியக்கிறேன் என்றார்.
அமேதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி பிரியங்கா காந்தியின் உதவியாளர் சஹாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சஹாய் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications