குடியரசு தின வரலாற்றில் முதல் முறை.. அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட 10 நாட்டு தலைவர்கள்
Recommended Video

டெல்லி: குடியரசு தின வரலாற்றில் முதல் முறையாக 10 ஆசியான் நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நாட்டின் 69வது குடியரசு தின விழா டெல்லியில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 10 ஆசியான் நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
வழக்கமாக ஏதாவது ஒரு நாட்டின் தலைவர்கள்தான் குடியரசு தின விழாவில் பங்கேற்று, குடியரசு தின அணிவகுப்பை பார்ப்பது வழக்கம். ஆனால், முதல் முறையாக இம்முறை 10 நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளநர்.

10 நாட்டு தலைவர்கள்
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வியட்னாம் பிரதமர் குகுயென் சூவான் பக், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே, மலேசியா பிரதமர் நாஜிப் ரசாக், தாய்லாந்து பிரதமர் பிரயட் சான்-ஓ-சா, புருனே சுல்தானும் பிரதமருமான ஹஸனல் போல்கியா, லாவோஸ் பிரதமர் தொங்லோன் சிசோலித், கம்போடியா பிரதமர் ஹுன்சென், மியான்மர் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.

சிறப்பு மாநாடு
ஆசியான் அமைப்பில் இந்தியா இணைந்ததன் 25ம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் நடைபெறும் சிறப்பு மாநாட்டிலும் அவர்கள் பங்கேற்கின்றனர். 10 நாட்டு தலைவர்கள் வருகையையொட்டி, டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிசிடிவி கேமராக்களுக்காக மட்டும் ரூ.7 கோடி செலவிடப்பட்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு அமர்வு
நேற்று இந்தியா மற்றும் ஆசியான் நாட்டு தலைவர்கள் கூட்டாக பங்கேற்ற சிறப்பு அமர்வு ஒன்று நடந்தது. இதில் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் கடல் பாதுகாப்பில் சந்திக்கும் சவால்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சீனாவுக்கு செக்
தென் சீனக்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக சீனாவுக்கும், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்தியாவின் தலைமையின்கீழ், இந்த 10 நாடுகளும் இணைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இது சீனாவுக்கு வைக்கப்படும் செக் என கூறுகிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள்.
சிங்கப்பூர் பிரதமருடன் சந்திப்பு
முன்னதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை தனியே சந்தித்து, பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். நிதி தொழில்நுட்பம், சுற்றுலா, ஸ்மார்ட் நகரங்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதங்களை மேற்கொண்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications