டிசம்பர் 30 வரை ஏ.டி.எம். சர்வீஸ் கட்டணங்கள் முற்றிலும் ரத்து: ரிசர்வ் வங்கி
ஏ.டி.எம்.மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் விதிக்கப்படும் சர்வீஸ் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். கிளைகளை பயன்படுத்துவதற்கான சர்வீஸ் கட்டணங்கள் டிசம்பர் 30-ம்தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரூ.500, ரூ.1,000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். மேலும், அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார் மோடி.

மக்கள் தங்களிடம் உள்ள 500 1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய பணத்தை மற்றிக்கொள்ள வங்கிகள், ஏ.டி.எம். முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். பல்வேறு இடங்களில் ஏ.டி.எம்.-கள் சில மணி நேரம் மட்டுமே இயங்குகின்றன. இதனால் மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த நிலையில் அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். கிளைகளை பயன்படுத்துவதற்கான சர்வீஸ் கட்டணங்கள் டிசம்பர் 30-ம்தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு 5 முறை பிற வங்கியின் ஏடிஎம்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.












Click it and Unblock the Notifications