Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனிதக் குழந்தைக்கு “தாய்” ஆன குரங்கு – நெகிழ்ச்சியில் ஹரியானா

Subscribe to Oneindia Tamil

ஹரியானா: ஹரியானாவில் குழந்தை ஒன்றை குரங்கு ஒன்று தாயின் இடத்தில் இருந்து கவனித்து வருகின்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது.

Awesome twosome: Monkey is toddler's new mother in Haryana

நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும் உடனே விளையாட ஆரம்பித்து விட்டனர். குரங்கை பார்த்து குழந்தை ஒரு போதும் பயப்படவில்லை. அன்று முதல் இன்று வரை கடந்த ஆறு மாதங்களாக சுல்தான் சிங் வீட்டிலேயே அக்குரங்கு வசித்து வருகிறது.

சுல்தான் சிங்கும், அவரது மனைவியும், குரங்கிற்கு "நானி" என்று பெயர் வைத்து அதை தங்கள் குழந்தை போல் பாவித்து வருகின்றனர். அதே போல் குரங்கும் சுல்தான் சிங்கின் குழந்தையை பெற்ற தாயை போல் கவனித்து வருகிறது.

குழந்தையை கொஞ்சி விளையாடுவதிலும், அதற்கு சோறூட்டுவதிலும், முத்தமிடுவதிலும், அவளை பராமரிப்பதிலும் பெற்ற தாயை போலவே நானி நடந்துகொள்கிறது.

வளர்ந்து வரும் நாகரிக உலகில் அடுத்தவருக்கு உதவும் குணத்தை மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் வேளையில், மனிதர்களால் விலங்கினம் என அழைக்கப்படும் குரங்கின் குணம் நாளுக்கு நாள் மேன்மையடைந்து வருவதை எப்படி பாராட்டினாலும் போதாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+