லாபத்தில் உள்ளூர் மக்களுக்கும் ஷேர் தர வேண்டும்.. ராம்தேவ் நிறுவனத்துக்கு உத்தரகாண்ட் கோர்ட் உத்தரவு
டேராடூன்: பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான யோகா குரு பாபா ராம் தேவ் தாங்கள் ஈட்டும் லாபத்தை உள்ளூர் மக்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று உத்தரகாண்ட் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனமாகும். பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வரும் இந்நிறுவனத்துக்கு சொந்தமாக திவ்யா பார்மசி என்ற நிறுவனம் இயங்கி வருகிறது.
அந்த நிறுவனம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் ஆயுர்வேத மூலப் பொருட்களை கொண்டு பொருட்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், உத்தரகாண்ட் பல்லுயிர் அமைப்பானது, பல்லுயிர் பெருக்க சட்டம், 2002-ன் கீழ், திவ்யா ஃபார்மசி நிறுவனம் தனது லாபமான 421 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயை உள்ளூர் மக்களுடனும், விவசாயிகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் அந்த நோட்டீஸுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திவ்யா ஃபார்மசி நிறுவனம், உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தது. அந்த வழக்கில்தான், தற்போது உத்தரகாண்ட் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பானது உத்தரகாண்ட் பல்லுயிர் அமைப்புக்கு சாதகமாக வந்துள்ளது.
அந்த தீர்ப்பில் உயர்நீதிமன்றம் கூறியிருப்பதாவது:
உத்தரகாண்ட் பல்லுயிர் அமைப்புக்கு திவ்யா ஃபார்மசியின் லாபத்தில் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முழு உரிமையும் உள்ளது. இயற்கை வளங்கள் என்பது தேசிய சொத்து மட்டுமல்ல. அது, எங்கிருந்து எடுக்கப்படுகிறதோ அங்கு வாழும் மக்களுக்கும் சொந்தமானதுதான் என்று நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications