பெங்களூர் மருத்துவமனையில் குழந்தையின் சடலத்தை எலி கடித்ததாக பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இறந்த குழந்தையின் உடலை எலி கடித்ததாக கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன்பு சுவாச பிரச்சினைக்காக 2 மாத பெண் குழந்தை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இறந்த சிறுமியின் சடலத்தை பிணவறையில் மருத்துவர்கள் வைத்திருந்த நிலையில், எலிகள் சிறுமியின் உடலை கடித்து குதறியுள்ளன.
இதை பார்த்த பெற்றோர்கள் மருத்துவமனையில் அலட்சியம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும், குழந்தைக்கு மித மிஞ்சிய மருந்துகள் அளித்துதான் அது உயிரிழந்துவிட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications