அன்னை தெரசா அறக்கட்டளையின் குழந்தைகள் காப்பகங்களில் ரெய்டு நடத்த மத்திய அரசு அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் அன்னை தெரசா அறக்கட்டளையின் குழந்தைகள் காப்பகங்களில் சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
டெல்லி: அன்னை தெரசா மிஷனரி அறக்கட்டளையின் குழந்தைகள் காப்பகங்களில் சோதனைகளை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அண்மையில் அன்னை தெரசா மிஷனரி அறக்கட்டளையின் காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக கன்னியாஸ்திரி ஒருவர் கைது செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் 22 குழந்தைகள் மீட்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநில அரசின் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு காப்பகங்கள் சீல் வைக்கப்பட்டன. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, அன்னை தெரசா மிஷனரி அறக்கட்டளைக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகங்களில் சோதனைகள் நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காப்பகங்கள் அனைத்தையும் மத்திய தத்தெடுப்பு ஆணையத்தின் கீழ் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் நாடு முழுவதும் 2,300 காப்பகங்கள் இந்த மத்திய தத்தெடுப்பு ஆணையத்தின் கீழ் பதிவு செய்யாதது சரியானது அல்ல எனவும் அதிருப்தியை மேனகா காந்தி வெளிப்படுத்தினார். நாடு முழுவதும் காப்பகங்களில் 2,32,937 குழந்தைகள் இருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications