டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது அஸ்ஸாம் கோர்ட்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்வாலுக்கு எதிராக ஜாமினில் வெளி வரக்கூடிய கைது வாரண்ட்டை அஸ்ஸாம் கோர்ட் பிறப்பித்துள்ளது.
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்வாலுக்கு எதிராக ஜாமினில் வெளி வரக்கூடிய கைது வாரண்ட்டை அஸ்ஸாம் கோர்ட் பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த அவதூறு வழக்கில் ஆஜராகாத கெஜ்வாலுக்கு இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சர்ச்சைக்குரிய டிவிட் ஒன்றை பதிவிட்டார். அதாவது பிரதமர் மோடி 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அரவது டிகிரி சான்றிதழ்கள் போலியானவை என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பாஜக தலைவர் சூர்யா ரங்ஃபர் என்பவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அஸ்ஸாம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து வழக்கை வரும் மே 8 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications