மாட்டிறைச்சி தடையை மேற்குவங்கத்தில் அமல்படுத்த முடியாது.. மமதா பானர்ஜி திட்டவட்டம்!
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்தை மேற்குவங்கத்தில் அமல்படுத்த முடியாது என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்தை மேற்குவங்கத்தில் அமல்படுத்த முடியாது என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரம்ஜான் மாதத் துவக்கத்தில் ஏன் இப்படி ஒரு தடையை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மத்திய அரசின் இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டங்களும் நடந்து வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்துகள் நடைபெற்று வருகின்றன.

மவுனம் காத்த மமதா பானர்ஜி
இந்நிலையில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத்திற்கும் தனிமனுஷியாக குரல் கொடுக்கும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மாட்டுக்கறி விவகாரத்தில் இதுவரை கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.

மாட்டிறைச்சி தடையை ஏற்கமுடியாது
இந்நிலையில் மமதா பானர்ஜி மாட்டுக்கறி விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசின் மாட்டிறைச்சித் தடையை எங்களால் ஏற்க முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஜனநாயகத்துக்கு எதிரானது
இந்த உத்தரவை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என உறுதியாக கூறினார். மேலும் இந்த உத்தரவு ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் நியாயமற்றது என்றும் அவர் சாடினார்.

ரம்ஜான் மாதத்தின் துவக்கத்தில்..
மாட்டிறைச்சி மீதான தடை மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கூறிய அவர் ரம்ஜான் மாதத்தின் துவக்கத்தில் ஏன் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். ஒருவரின் உணவில் தலையிடும் உரிமை அரசுக்குக் கிடையாது என்றும் அவர் சாடினார்.
-
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications