ஹைதராபாத்தில் பிச்சை எடுத்தால் சிறை.. போலீஸ் கமிஷனர் உத்தரவு!
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்றில் இருந்து பிச்சை எடுக்க தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.
ஹைதராபாத்: தெலுங்கான தலைநகர் ஹைதராபாத்தில் இன்றில் இருந்து பிச்சை எடுக்க தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும். சரியாக இன்று மாலை ஆறுமணியில் இருந்து இந்த தடை சட்டம் ஆரம்பிக்கும்.
ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாக பிச்சைக்காரர்கள் காரணமாக நிறைய பிரச்சனைகள் நடந்து வருகிறது. பல இடங்களில் இதன் காரணமாக தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுத்தமான இடங்கள் பிச்சைக்காரர்களால் அசுத்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஹைதராபாத் காவல்துறை முடிவு எடுத்துள்ளது. அதன்படி இனி ஹைதபாரத்தின் எந்தப் பகுதியிலும் பிச்சை எடுக்க கூடாது என போலீஸ் அறிவித்தது. இதுகுறித்த தகவலை ஹைதரபாத் காவல் துறை கமிஷனர் எம்.மஹேந்திர ரெட்டி வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஹைதராபாத் பகுதியில் பிச்சை எடுப்பவர்களால் பொது மக்களுக்கு நிறைய இடைஞ்சல்கள் ஏற்படுகிறது. பிச்சை தொழிலில் நிறைய குழந்தைகளும், பெண்களும் ஈடுபடுகிறார்கள். அதேபோல் இவர்களால் பல சமயங்களில் சாலை விபத்தும் ஏற்படுகிறது. ஆகவே ஹைதரபாத்தில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்படுகிறது'' என்று கூறினார்.
இந்த தடை 2018 ஜனவரி 1ம் தேதி வரை மட்டுமே இருக்கும். தடையை மீறி பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கபப்டும். இதன் விளைவுகளை பார்த்துக் கொண்டு தடையை நீட்டிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் அறிவித்து உள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications