பாரத் பந்த்: தமிழகத்தில் ஒரு பாதிப்பும் இல்லை.. மாநில எல்லைகளில் பஸ்கள் நிறுத்தம்!
சென்னை: நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பாரத பந்த் காரணமாக தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழகத்தில் வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அண்டை மாநில எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 10 தொழிற்சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் வர்த்தக நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் தொழிலாளர் நல மசோதாவிற்கு எதிராக முழக்கமிட்டனர். ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது.
டெல்லி, மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே பலத்த பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன.
பெங்களூருவில் வேலைநிறுத்ததால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. இருப்பினும் சிலர் வெளியூர்களுக்கு செல்ல பேருந்து நிலையம் வந்திருந்தனர். அவர்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

தமிழகத்தில் பாதிப்பு இல்லை
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாநகரப் பேருந்துகளை வழக்கம் போல் இயங்குகின்றன.
ஆட்டோக்கள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. மக்கள் பலரும் அலுவலகத்திற்கு சென்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பேருந்து போக்குவரத்து
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தமிழகத்தில் இருந்து அன்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு செல்லும் வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் பந்த்
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் குமரி மாவட்டத்தில் குழித்துறையிலும், கோவையில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்து எல்லை சோதனை சாவடியிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

திருத்தணியில் நிறுத்தம்
சித்தூர், திருப்பதி போன்ற ஊர்களுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் திருத்தணியோடு நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஆந்திர அரசின் பேருந்துகள் தமிழகத்திற்கு இயக்கப்படுகின்றன.

போலீஸ் பாழகாப்பு
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. 9 தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கிண்டி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications