'அந்த' மாதிரி சைட்ட ஓபன் செய்தால் சிவபஜனை பாடல் ஒலிக்கும்...பனாரஸ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆப்(பு)!
போர்னோகிராபி வெப்சைட்டுகளை ஓபன் செய்தால் பஜனைப் பாடல்கள் ஒலிப்பது போன்ற புதிய செயலியை பனாரஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் உருவாக்கியுள்ளார்.
வாரனாசி: பனாரஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியில் இன்ஸ்டிட்யூட்டின் பேராசிரியர் போர்னோ சைட்டுகளை ஓபன் செய்தாலே பஜனைப் பாடல்கள் ஒலிப்பது போன்ற செயலியை ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் இணையதள பயன்பாடு என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. குறிப்பாக செல்போனிலும் இந்த இணையதள பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் இளம் தலைமுறையினர் தவறான தேடல்களுக்கு ஆளாகிவிடுகின்றனர். எந்நேரமும் இணையதளத்திலேயே மூழ்கியிருக்கும் இளைஞர்கள் பல நேரங்களில் தவறான பக்கங்களை பார்த்து தீய பழக்கங்களைப் பழகிக்கொள்கின்றனர்.
போர்னோகிராபி வெப்சைட்டுகளை இளைஞர்கள் அதிக அளவில் நாடுவது வாரனாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் டாக்டர் விஜய் நாத் மிஸ்ராவிற்கு இதை தடுப்பதற்கான ஒரு யோசகை கிடைத்துள்ளது.

பஜனை பாடல் கேட்கும்
இதன் அடிப்படையில் நியூராலஜி பேராசிரியரான அவர் பனாரஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து ஒரு செயலியை உருவாக்கியுள்ளார். 'ஹர ஹர மகாதேவ்' என்ற அந்த செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது, இது போர்னோ சைட்டுகளை பிளாக் செய்வதோது, அந்த மாதிரியான சைட்டுகளை திறந்தாலே பஜனைப் பாடல்களும் ஒலிக்கும் படியும் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் வேறு பாடல்கள்
தற்போது இந்த செயலியில் ஹர ஹர மகாதேவனின் பாடல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் காயத்ரி மந்திரம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோரின் எழுச்சியான உரையாடல்களையும் ஒலிக்கச் செய்ய இந்தக் குழு திட்டமிட்டுள்ளது.
|
மதவாத சிந்தனையல்ல
மேலும் இது மதவாத சிந்தனையோடு உருவாக்கப்பட்ட செயலியல்ல என்றும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் இது போன்ற இணையதளங்களை திறந்தால் 'அல்லாஹ் அக்பர்' என்று ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பபட உள்ளதாகவும் கூறினார். இளைஞர்கள் போர்னோகிராபிக்கு அடிமையாவதில் இருந்து தடுப்பது ஒன்றே இந்த செயலியின் நோக்கம் என்பது பேராசிரியர் விஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.

பயனுள்ள ஆப்
இந்த செயலிலை டெஸ்க்டாப் மற்றும் மொபைல் இரண்டிலுமே பயன்படுத்தலாம். மேலும் இதற்கு ஹர ஹர மகாதேவ் என்று பெயரிடப்பட்டுள்ளதற்கான காரணத்தையும் பேராசிரியர் விளக்கியுள்ளார். சிவன் தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்தவர் என்ற நோக்கிலேயே செயலிக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications