இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 10 லட்சம் தலித்துகளை டெல்லியில் திரட்ட போகிறதாம் பாஜக!!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி தற்போது 'இடஒதுக்கீடு ஆதரவு' நிலையை கையில் எடுத்துள்ளது. இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 10 லட்சம் தலித்துகள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை டெல்லியில் நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.
மத்தியில் ஆளும் அரசாக உருவெடுத்த பின்னர் தொடர்ந்து இடஒதுக்கீடு என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பதை பாஜக தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வருகிறது. குஜராத்தில் ஹர்திக் படேல் என்ற இளைஞரை தூண்டிவிட்டு இடஒதுக்கீடு கொடு அல்லது இடஒதுக்கீடு முறையையே ஒழித்துவிடு என்ற புதிய கோஷத்தை முன்வைத்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் அண்மையில், ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.
இதற்கு ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, முடிந்தால் மத்திய அரசு இடஒதுக்கீட்டை ரத்து செய்து பார்க்கட்டுமே என்று சவால் விட்டிருந்தனர்.
இருப்பினும் பீகார் சட்டசபை தேர்தல் (அக்டோபர் 12 முதல் நவம்பர் 5வரை) நடைபெறும் நிலையில் இதுபோன்ற கருத்துகள் பகிரங்கமாக விவாதிக்கப்படுவதை விரும்பாத பா.ஜ.க., மோகன் பகவத் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இடஒதுக்கீட்டு முறையை மறு ஆய்வு செய்ய மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.
பீகார் தேர்தலில் இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதிகளாக இருக்கும் நிதிஷ், லாலு ஆகியோர் ஓரணியில் இருக்கின்றனர். அதே நேரத்தில் உயர் ஜாதியினரும் தலித்துகளும் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் பாஸ்வான், மாஞ்சி ஆகியோர் இருப்பதால் ஒட்டுமொத்த தலித்துகள் வாக்குகளும் தங்களுக்குத்தான் என கருதுகிறது பா.ஜ.க.
இதற்கு வேட்டு வைக்கும் வகையில் இடஒதுக்கீட்டை ஒழிப்போம் என்ற கோஷம் அமைந்துவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க. முனைப்புடன் உள்ளது. இதனால் அந்த கட்சியின் தலித் முகமாக கருதப்படுகிற உதித் ராஜ் எம்.பி. மூலமாக தற்போது 'இடஒதுக்கீடு' ஆதரவு போராட்டம் நடத்த தயாராகிவிட்டது.
இடஒதுக்கீடு அவசியம்; தொடர வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து டெல்லியில் 10 லட்சம் பேரை திரட்டப் போவதாக அறிவித்துள்ளது. அத்துடன், இடஒதுக்கீடே வேண்டாம் என்கிற ஹர்திக் படேல் சில லட்சம் பேரை திரட்ட முடியும் என்றால் இடஒதுக்கீடு கோருகிற நாங்கள் 10 லட்சம் பேரை திரட்ட முடியும் எனவும் கூறியுள்ளார் உதித் ராஜ். டெல்லி ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் 7ம் தேதியன்று இந்த இடஒதுக்கீடு பேரணியை நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார் உதித் ராஜ்.
நடத்துங்க.. நடத்துங்க...
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications