டெல்லி தோல்வியும்... 2004ல் "ஒளிர்ந்த இந்தியாவும்"... ஒரு சோக பிளாஷ்பேக்!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக தோற்ற விதத்தைப் பார்க்கும்போது 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி சந்தித்த பெரும் தோல்விதான் நினைவுக்கு வருகிறது.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்கள் பாஜகவை விரட்டி விரட்டி அடித்த செயல் இன்னும் நாட்டு மக்களால் நம்ப முடியவில்லை. எப்படி இப்படித் தோற்றது பாஜக என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
ஆனால் பாஜக தோற்றதற்கு வேறு யாரும் காரணமல்ல, அவர்களே காரணம் என்பது உற்று நோக்கினால் தெரியும். மக்களிடம் பாஜக மீது நிறைய அதிருப்திகள் உள்ளன. இதுதான் டெல்லி சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்து விட்டது.
இந்த நேரத்தில் நமக்கு 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்தான் நினைவுக்கு வருகிறது.

இடைத் தேர்தல் வெற்றியை நம்பி
2003ம் ஆண்டு கடைசியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநில சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. அதில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றது. அப்போது மத்தியில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் தேசியக் கூட்டணி அரசு பதவியில் இருந்தது. சட்டசபைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டது பாஜக.

கையில் எடுத்த தவறான பிரசாரம்
இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக ஒரு புதிய பிரசார உத்தியையும் கையில் எடுத்தது. அதுதான் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம்.

அப்படியே எதிராக திரும்பிய கோஷம்
ஆனால் இந்த இந்தியா ஒளிர்கிறது கோஷத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்படியே தங்களுக்குச் சாதகமாக திருப்பின. பாஜக ஆட்சியின் அலங்கோலங்களை அவர்கள் வெட்ட வெளிச்சமாக்கி பிரசாரம் செய்ததால், இந்தியா ஒளிர்கிறது என்ற பாஜகவின் கோஷம் மக்கள் மத்தியில் எடுபடாமல் போனது.

மோடியைப் போல வாஜ்பாயை முன்னிறுத்தி
எப்படி மோடி பதவிக்கு வந்த பிறகு அவரை முன்னிறுத்தி ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்ததோ பாஜக, அதேபோல அந்தத் தேர்தலில் வாஜ்பாய் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டது பாஜக. ஆனால் மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டனர். பெரும் தோல்வியைப் பரிசாக கொடுத்து விட்டனர்.

தப்புத்தான்... ஒப்புக் கொண்ட அத்வானி
தேர்தல் தோல்விக்குப் பின்னர் கருத்து தெரிவித்த எல்.கே.அத்வானி, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது தவறுதான் என்று ஒப்புக் கொண்டார். அதீத நம்பிக்கையில் கட்சி இருந்து விட்டதாகவும் அவர் கூறினார். மேலும் 2002ல் நடந்த குஜராத் கலவரங்களும் சேர்ந்து கட்சியை 2004 தேர்தலில் பதம் பார்த்து விட்டன.

மீண்டும் அதேபோல ஒரு அடி
தற்போது டெல்லி சட்டசபைத் தேர்தலிலும் கிட்டத்தட்ட அதேபோன்றதொரு அடியை பாஜக வாங்கியுள்ளது. அதீத நம்பிக்கை, மோடி உள்ளிட்ட பாஜகவினரின் எதிர்மறைப் பிரசாரம், நாட்டையே மோடி அரசு வளப்படுத்தி விட்டது போன்று ஏற்படுத்தப்பட்ட பிரமை, மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படாமல் கெஜ்ரிவாலை மட்டும் குறி வைத்து தாறுமாறாகப் பிரசாரம் செய்தது, ஆப் கி பார் மோடி சர்க்கார் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசியது என எல்லாம் சேர்ந்து பாஜகவை படுகுழியில் தள்ளி விட்டது.

என்ன நடக்குதுன்னே தெரியாமல்
மக்கள் மத்தியில் என்ன நடக்கிறது, மக்கள் என்ன நினைக்கிறார்கள், நாம் என்ன செய்கிறோம், மக்கள் கோரிக்கைகள் என்ன, மக்கள் பிரச்சினை என்ன, உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து பாஜக ஒருபோதும் கண்டு கொள்வதே இல்லை. அந்தத் தவறுக்காக இப்போது டெல்லியில் தண்டிக்கப்பட்டுள்ளது பாஜக - மீண்டும் ஒருமுறை.

எதற்கெடுத்தாலும் மோடி என்றால் எப்படி
எல்லாவற்றுக்கும் மோடியை மட்டுமே நம்பி வேலை பார்ப்பது, எதற்கெடுத்தாலும் மோடி முகமூடியைக் கொண்டு வந்து மக்கள் முன் வைப்பது என்று பாஜக தன்னிச்சையாக செயல்படுவதும் அக்கட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்க இன்னொரு முக்கியக் காரணம்.

உலகத்திலேயே இல்லாத தலைவர் போல
என்னவோ உலகத்திலேயே மோடியைப் போல ஒரு தலைவர் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை என்பது போல பாஜகவினர் நடந்து வரும் மக்களை எரிச்சல்படுத்தி விட்டது. இன்னும் சொல்லப் போனால், மோடி மீது பிரியம் வைத்திருந்தவர்கள் கூட அட என்னங்கய்யா இது என்று அதிருப்தி அடையும் அளவுக்கு பாஜகவினரின் சர்வாதிகார எண்ணம் அதீதமாக இருந்து வருகிறது. இதை பாஜக நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அலட்சியம்.. பல பிரச்சினைகளின் தாயகம்
-
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு!












Click it and Unblock the Notifications