கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து- 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
கொச்சி: கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த நிலையில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொச்சியில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான சாகர் பூஷண் கப்பலில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர்.

படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாகர் பூஷண் கப்பல், பழுது பார்ப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications