மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி- 9 பேர் படுகாயம்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் சைக்கிள் குண்டு வெடித்து சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் பாஜ்ரபாராவில் உள்ள பள்ளி அருகே நேற்று இரவு திடீரென சைக்கிளில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 9 பேர் ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கே.எல்.ஒ எனப்படும் கம்தாபூர் விடுதலை அமைப்பு, கம்தாபூர் தனி மாநிலம் கோரி கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை கே.எல்.ஒ. அமைப்பு நடத்தி இருக்கலாம் என அம்மாநில போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய ஜல்பைகுரி மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications