மீண்டும் வரிந்து கட்டி வரும் பீட்டா... ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்ததாக புகார்
ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக பீட்ட அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி: ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதாக பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆதாரத்தை உச்சநுதிமன்றத்தில் அளிக்கவுள்ளதாவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தடை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு எப்படியாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தியே தீர வேண்டும் என சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் அவசர சட்டம் இயற்றினார். பின்னர் அந்த் அவசரச் சட்டம் சட்டமாக்கப்பட்டது.

இந்த ஆண்டுதான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது
இந்தச்சட்டம் அரசிதழிலும் வெளிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர், அவனியாபுரம் உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ள பீட்டா
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பு தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

மிருகவதை நடந்துள்ளது
அப்போது ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்பட்டு மிருகவதை நடந்துள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

ஆதாரங்களை கொடுப்போம்
தற்போது நடந்த ஜல்லிக்கட்டில் அதிகளவு மிருகவதை நடந்துள்ளது என்ற அவர் மிருகவதை குறித்த ஆதாரங்களை விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழங்குவோம் என்றும் அவர் மிரட்டியுள்ளார். பல பிரபலங்களின் ஆதரவு பீட்டாவுக்கு உள்ளது என்றும் பீட்டா அமைப்பின் இந்தியத்தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications