மந்திரமாவது! மாயமாவது!...எல்லாம் மனநோய்தான்... புராரி வழக்கில் உளவியல் நிபுணர் உதவியை நாடும் போலீஸ்
டெல்லி புராரியில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாமியாரின் தூண்டுதல் ஏதும் இல்லை என்ற முடிவில் போலீஸார் உள்ளனர்.
Recommended Video

டெல்லி: டெல்லி புராரியில் 11 பேர் பலியான சம்பவத்தில் மனநோய்தான் காரணம் என்றும் சாமியாரின் தூண்டுதல்கள் ஏதும் இல்லை என்றும் போலீஸார் கருதுகின்றனர்.டெல்லி புராரியில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பினர்.
அதில் இவர்கள் எவ்வித போராட்டமுமின்றி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வீட்டில் சோதனை நடத்தியதில் அமானுஷயமான விஷயங்கள் கிடைத்தன. இரு நோட்டுபுத்தகங்களில் இறைவனை காண்பது எப்படி என்ற தலைப்பில் தற்கொலை குறித்த திட்டத்தின் குறிப்பு இருந்தது.

விசாரணை
அதுவும் யாரோ ஒருவர் கட்டளையை பிறப்பித்தால் எப்படி இருக்குமோ அதுபோல் இருந்தது. இதனால் ஏதேனும் மாந்த்ரீகர்களின் வேலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் போலீஸார் 11 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாமியார் இல்லை
இந்நிலையில் போலீஸாருக்கு 3-ஆவதாக புத்தகம் ஒன்று கிடைத்துள்ளது. அதிலும் இறைவனிடம் செல்வது, சூன்யா, கடவுளை திருப்திப்படுத்துவது உள்ளிட்ட குறிப்புகள் இருந்தன. இதனால் இந்த தற்கொலைக்கு பின்னால் சாமியார் இருப்பதை போலீஸார் மறுக்கின்றனர்.

பகிரப்பட்ட மனநோய்
இது முழுக்க முழுக்க மனநோய் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மனநோய் மருத்துவரின் உதவியை போலீஸார் நாடுகின்றனர். இதுதொடர்பாக மூத்த மருத்துவர் ஒருவரிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் பேசினார். அப்போது இதுபோன்ற மனநோய்க்கு பெயர் பகிரப்படும் மனநோய் என்றார்.

அமானுஷ்யங்கள்
ஒருவர் கற்பனையில் நம்பும் விஷயத்தை மற்றவர்களையும் நம்ப வைப்பது ஆகும். அதுபோல் நாராயணின் மகன் லலித் கடவுளை பார்க்கலாம், இறந்த தந்தையை பார்க்கலாம் என்று சொல்லி அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இவர்களது உறவினர்களும் இவர்களுக்கு அமானுஷ்யங்களில் நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications