உடனடியாக காவிரி வாரியம் அமைக்க வேண்டும்.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு
உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இன்னும் வாரியம் அமைக்கவில்லை. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.

கடந்த விசாரணையில் தமிழகத்திற்கு மே மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.ஆனால் தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அறிக்கை அளித்துள்ளது.
கர்நாடகா இப்படி மோசமாக பதில் அளித்துள்ள நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது. அதன்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகா மதிக்கவில்லை என்று கூறி மனுதாக்கல் செய்துள்ளது.
மேலும் அவர்கள் மனுவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் இந்த பிரச்சனை இருக்காது, வாரியம் தண்ணீர் திறக்கும் பணிகளை பார்த்துக் கொள்ளும், இதனால் உடனடியாக வாரியம் அமைக்க வேண்டும் என்றுள்ளது. நாளை காவிரி வழக்கு விசாரணை நடக்க உள்ள நிலையில் தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications