காவிரி: மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருக்கும்.. செயல்திட்ட குழு மேற்பார்வையிடும்
காவிரி நீர் ஓடும் பகுதிகளில் உள்ள அணைகள் எல்லாம் அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று மத்திய அரசு சமர்ப்பித்த காவிரி மேலாண்மை செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: காவிரி நீர் ஓடும் பகுதிகளில் உள்ள அணைகள் எல்லாம் அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று மத்திய அரசு சமர்ப்பித்த காவிரி மேலாண்மை செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில் இந்த காவிரி மேலாண்மை செயல்திட்டத்தின் 4வது பத்தியில் மிக முக்கியமான விஷயம் கூறப்பட்டுள்ளது. காவிரி நீர் ஓடும் பகுதிகளில் உள்ள அணைகள் எல்லாம் அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று மத்திய அரசு சமர்ப்பித்த காவிரி மேலாண்மை செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை செயல்குழு இதனை மேற்பார்வையிடும், ஆனால் அணையின் கட்டுப்பாடு மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
அதன்படி கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணசாகர் அணை, கேரளாவில் உள்ள பன்சூராசாகர் அணை, தமிழகத்தில் உள்ள கீழ் பவானி, அமராவதி, மேட்டூர் ஆகிய அணைகள் அனைத்தும் எப்போதும் போல மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். ஆனால் காவிரி மேலாண்மை செயல்திட்ட குழு அதை மேற்பார்வையிடும். அதேபோல் இந்த குழு 10 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் திறந்துவிடும் படி ஆணையிடும்.
இந்த குழுவின் பரிந்துரையை மாநில அரசுகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பின் உபரி தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த குழுதான் குறிப்பிடும், அதைத்தான் அந்த மாநில அரசுகள் செய்ய வேண்டும் .
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications