சி.பி.ஐ. மனு விசாரணைக்கு ஏற்பு: ஓம் பிரகாஷ் சவுதாலாவின் ஜாமீன் ரத்தாகிறது?
டெல்லி: ஊழல் வழக்கில் சிறையில் இருந்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா ஜாமீனை ரத்து செய்யக் கோரும் சிபிஐ மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
ஹரியானா முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சிக்கியவர்.
2000-ம் ஆண்டு 3 ஆயிரம் இளநிலை ஆசிரியர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 8 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

மற்ற குற்றவாளிகளான 44 பேருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. 79 வயதான ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு மருத்துவ காரணங்களுக்காக மே மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. வருகிற 15-ந் தேதி நடைபெறும் ஹரியானா மாநில தேர்தலுக்காக அவர் தற்போது பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சவுதாலா நிபந்தனை ஜாமீனை மீறியுள்ளதாகக் கூறி அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது. தேர்தல் முடிந்த 2 நாட்களில் அதாவது 17-ந் தேதி அவர் சரண் அடைய வேண்டும் என்றும் சி.பி.ஐ. விருப்பம் தெரிவித்தது.
இதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக் கொண்டது. இதனால் சவுதாலாவின் ஜாமீன் எந்த நேரமும் ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications