பேங்க் ஆப் பரோடா கிளையில் ரூ. 6172 கோடி கருப்புப் பணம் பரிவர்த்தனை... 50 இடங்களில் சிபிஐ ரெய்டு
டெல்லி: டெல்லியில் உள்ள பேங்க் ஆப் பரோடா கிளையில் ரூ. 6000 கோடி அளவுக்கு கருப்புப் பணம் கையாளப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை வெடித்துள்ள விவகாரத்தில் இன்று நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு டெல்லி, பேங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ஹாங்காங்கிற்கு கருப்பு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் நேற்று வடக்கு டெல்லியில் உள்ள அந்த வங்கியில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
முன்னதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தனது ஆட்சியில் ஊழல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி கூறி வருவது பொய். அவரது ஆட்சி அமைந்த 2 மாதங்களுக்குப் பிறகு ரூ.6,000 கோடிக்கும் கூடுதலான கருப்புப்பணம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்காக, டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் உள்ள 59 கணக்குகளில் ரூ.6,172 கோடி முன்கூட்டியே டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. அந்தத் தொகை ஹாங்காங்கில் உள்ள சில நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. இத்தொகையை அனுப்பியவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரியின்படி, மேற்கண்ட நிறுவனங்களில் 3 நிறுவனங்களைக் கண்டறிய இயலவில்லை.
ஹாங்காங்கில் இருந்து அரிசி, முந்திரி, பருப்பு வகைகள் ஆகியவற்றை வாங்குவதற்காக இந்தத் தொகை அனுப்பி வைக்கப்பட்டதாக அவர்கள் கூறியிருந்தது வேடிக்கையாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அறிக்கையை சமர்பித்த பிறகும் இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு முறைகேடு வங்கியின் உயரதிகாரிகள் அல்லது நிதி அமைச்சகத்தின் உதவியின்றி நடந்திருக்க முடியாது.
டெபாசிட்டுகள், டிரான்ஸ்பர், பண எடுப்புகள் உள்ளிட்டவற்றில் ஒரு நிறுவனம் வங்கியில் செய்யும் பரிமாற்றங்களை முறைப்படி கண்காணிக்காமல் ஒரு அரசு வங்கி எப்படி இந்த அளவுக்கு பொறுப்பின்றி நடந்து கொள்ள முடியும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று குறிப்பிட்ட அந்த வங்கியில், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
50 இடங்களில் அதிரடி ரெய்டு
இந்த நிலையில் இன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டுகளை நடத்தியுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications