பேங்க் ஆப் பரோடா கிளையில் ரூ. 6172 கோடி கருப்புப் பணம் பரிவர்த்தனை... 50 இடங்களில் சிபிஐ ரெய்டு
டெல்லி: டெல்லியில் உள்ள பேங்க் ஆப் பரோடா கிளையில் ரூ. 6000 கோடி அளவுக்கு கருப்புப் பணம் கையாளப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை வெடித்துள்ள விவகாரத்தில் இன்று நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு டெல்லி, பேங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ஹாங்காங்கிற்கு கருப்பு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் நேற்று வடக்கு டெல்லியில் உள்ள அந்த வங்கியில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
முன்னதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தனது ஆட்சியில் ஊழல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி கூறி வருவது பொய். அவரது ஆட்சி அமைந்த 2 மாதங்களுக்குப் பிறகு ரூ.6,000 கோடிக்கும் கூடுதலான கருப்புப்பணம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்காக, டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் உள்ள 59 கணக்குகளில் ரூ.6,172 கோடி முன்கூட்டியே டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. அந்தத் தொகை ஹாங்காங்கில் உள்ள சில நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. இத்தொகையை அனுப்பியவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரியின்படி, மேற்கண்ட நிறுவனங்களில் 3 நிறுவனங்களைக் கண்டறிய இயலவில்லை.
ஹாங்காங்கில் இருந்து அரிசி, முந்திரி, பருப்பு வகைகள் ஆகியவற்றை வாங்குவதற்காக இந்தத் தொகை அனுப்பி வைக்கப்பட்டதாக அவர்கள் கூறியிருந்தது வேடிக்கையாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அறிக்கையை சமர்பித்த பிறகும் இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு முறைகேடு வங்கியின் உயரதிகாரிகள் அல்லது நிதி அமைச்சகத்தின் உதவியின்றி நடந்திருக்க முடியாது.
டெபாசிட்டுகள், டிரான்ஸ்பர், பண எடுப்புகள் உள்ளிட்டவற்றில் ஒரு நிறுவனம் வங்கியில் செய்யும் பரிமாற்றங்களை முறைப்படி கண்காணிக்காமல் ஒரு அரசு வங்கி எப்படி இந்த அளவுக்கு பொறுப்பின்றி நடந்து கொள்ள முடியும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று குறிப்பிட்ட அந்த வங்கியில், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
50 இடங்களில் அதிரடி ரெய்டு
இந்த நிலையில் இன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டுகளை நடத்தியுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications