போபர்ஸ் ஊழலைப் போல ராஜீவ் காந்தி கொலை வழக்கும் மீண்டும் விசாரிக்கப்படுகிறதா?
போபர்ஸ் ஊழலைப் போல ராஜீவ் காந்தி கொலை வழக்கும் மீண்டும் விசாரிக்கப்படலாமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி: காங்கிரஸுக்கு எதிரான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலைப் போல ராஜீவ் காந்தி கொலை வழக்கும் மீண்டும் விசாரிக்கப்படலாமோ என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
1980களின் மத்தியில் இந்தியாவை புரட்டிப் போட்டது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றது.
சுவீடனின் போபர்ஸ் பீரங்கிகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு அரசியல் தலைவர்களுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது வழக்கு. இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

மீண்டும் விசாரணை
ஆனால் போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியது தொடர்பான 1989, 199ம்- ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கைகள் நாடாளுமன்றத்தின் பொது கணக்கு குழுவில் நிலுவையில் இருக்கின்றன. இதை பொது கணக்கு குழுவின் துணைக் குழு ஆராய்ந்து மீண்டும் விசாரிக்க முடியுமா? என சிபிஐயிடம் கேட்டிருந்தது.

சிபிஐ தயார்
இதற்கு பதிலளித்த சிபிஐ, போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரிக்க தயார் என பதில் அளித்திருக்கிறது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அர்ஜூன்சிங் கடிதம்
இந்நிலையில் 1999-ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கு மறைந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன்சிங் எழுதிய கடிதம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை எனவும் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பெல்ட் வெடிகுண்டு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் அர்ஜூன்சிங் வலியுறுத்தியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
உச்சநீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரை விடுவிப்பது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அர்ஜூன்சிங்கின் கடிதம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பெல்ட் வெடிகுண்டு
அதுவும் பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக விசாரித்தால் நாங்கள் குற்றமற்றவர்கள் என தெரிய வரும் என பேரறிவாளன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதை வலுப்படுத்தும் விதமாக அர்ஜூன்சிங் கடிதம் திடீரென வெளியாகி உள்ளதால் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலைப் போல ராஜீவ் கொலை வழக்கும் மீண்டும் விசாரிக்கப்படக் கூடுமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications