தினசரி 10 பேர் என 4 நாட்களில் 50 பேரிடம் சிக்கித் தவித்த பெண்.. கெஸ்ட்ஹவுஸில் பயங்கரம்!
கெஸ்ட் ஹவுஸில் பணி என கூறி 21 வயது பெண்ணை அடைத்து வைத்து 50 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்.
சண்டீகர்: சண்டீகரில் தனியாக இருந்த கெஸ்ட் ஹவுஸில் பணி என கூறி 21 வயது பெண்ணை அழைத்து சென்று அங்கு அடைத்து வைத்து 50 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
சண்டீகரில் பஞ்சகுலா பகுதியில் மோர்னி மலைக்குன்றில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இங்கு ஹவுஸ் கீப்பீங் பணிக்கு என 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டார். அவருக்கு ரூ.12000 ஊதியமாக பேசப்பட்டது.
இந்நிலையில் அவர் கடந்த ஜூலை 15-ஆம் தேதி அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்து செல்லப்பட்டார். பணிகள் முடிந்த நிலையில் அவர் வீட்டுக்கு திரும்ப தயாரானார்.
சுனில்குமார்
அப்போது அந்த உரிமையாளர் சுனில் குமார் அந்த பெண்ணை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்தார். இதையடுத்து சுனில் குமார் முதலில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார்.
மதுபானம்
இதையடுத்து சுனில் குமாரின் நண்பர்கள் அங்கு வந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். இதுபோல் ஒரு நாளைக்கு 10 பேர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். அவர் அங்கிருந்து தப்ப கூடாது என்பதற்காகவும் கூச்சல் போட்டு காட்டி கொடுக்கக் கூடாது என்பதற்காகவும் அவருக்கு மதுபானமும் போதை மருந்துகளும் கொடுக்கப்பட்டன.
ஓரிரு நாளில்
இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் அவருக்கு போன் செய்தார். ஆரம்பத்தில் போனை எடுத்த அந்த பெண் விரைவில் வீடு திரும்புவேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு கணவர் எப்போது போன் செய்தாலும் அதை சுனில் குமார் எடுத்து பேசி இன்னும் ஓரிரு தினங்களில் வந்துவிடுவார் என்றே கூறி வந்தார்.
பலாத்காரம்
இதனால் சந்தேகம் அடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர். 18 ஆம் தேதி மீட்கப்பட்ட அந்த பெண்ணை 50 பேர் வரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சுனில் குமார் மற்றும் அவரது நண்பர் அவதார் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.